விஜய்சேதுபதியா? யார் அவர்? ரசிகரின் கேள்வியும் கார்த்திக் சுப்புராஜின் பதிலும்!

நடிகர் விஜய் சேதுபதியை யாரென்று இன்று யாராவது கேட்டால் அவருக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது என்றுதான் அர்த்தம். ஆனால் பத்து வருடங்களுக்கு முன் விஜய் சேதுபதியை யாரென்று கேட்டால் அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அன்றைய காலத்தில் அவர் யாருக்கும் தெரியாத ஒருவராகத்தான் இருந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தனது டுவிட்டரில் நாளை ’தென்மேற்கு பருவகாற்று’ ரிலீசாக உள்ளதாகவும் அவரை பெரிய திரையில் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறி திரையுலகை ஒரு கலக்கு கலக்கும் நடிகர் இன்று அறிமுகம் ஆகிறார் என்று ஒரு டுவீட்டை பதிவு செய்தார்.

அந்த வீட்டின் கீழே ஒரு ரசிகர் ’விஜய் சேதுபதி யார்? என்று ஒரு கேள்வியை கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்பராஜ் ’அவர் யார் என்பதை கூடிய சீக்கிரம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்’ என்று கூறியிருந்தார்.

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட இந்த டுவீட்டை இன்று படிக்கும்போது கார்த்திக் சுப்புராஜ் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதும், அவர் அன்றே விஜய்சேதுபதியின் வளர்ச்சியை கணித்துள்ளார் என்பதும் தெரிய வருகிறது.
 

More News

இப்படியே இருங்க, மாறாதீங்க: சூப்பர்டீலக்ஸ் நடிகரின் வாழ்த்து

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக இன்று காலை முதல் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர் 

'தலைவி' படத்தின் எம்ஜிஆர் லுக்: ஒரு ஆச்சரியமான தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கூறப்படும் 'தலைவி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

ரஜினிக்கு விசா மறுப்பா? இலங்கை அரசு விளக்கம்

நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது

மக்களின் செல்வன் விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தற்போது மக்கள் செல்வன் என்ற பட்டத்தை பெற்றுள்ள விஜய்சேதுபதி மக்களின் விருப்பத்துக்குரிய நடிகராகவே மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இன்று பிறந்த நாள் கொண்டாடும்

கிராம சபை கூட்டம் - பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய சில விளக்கங்கள்

இந்தியாவின் பொருளாதாரம் கிராமங்களில் இருந்து தான் தொடங்குகிறது என்றார் காந்தியடிகள். கிராமங்கள் தன்னளவில் தன்னிறைவு பெற்று விளங்கினால் மட்டுமே, பொருளாதார வளர்ச்சி நிலைமையில் முன்னேற்றம் பெற முடியும்.