close
Choose your channels

நயன்தாராவுக்காக மோதிக்கொண்ட இரண்டு இயக்குனர்கள்

Monday, January 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 2005ஆம் ஆண்டு ஐயா என்ற தமிழ் படத்தில் அறிமுகமானாலும் அதற்கு முன்னரே அவர் மூன்று மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’மனசினக்கரே’ என்ற மலையாளப் படத்தில் அவர் அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியவர் சத்தியன் சத்யன் அந்திக்காடு என்பவர்

இந்த நிலையில் டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயரை கொண்டவருக்கு நயன்தாரா என வைத்தது நான்தான் என இயக்குனர் ஜான் டிட்டோ என்பவர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்து இருந்தார். நயன்தாரா நடித்த முதல் படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் அந்த படத்தில் நடித்து வரும் நாயகிக்கு பெயர் தேடுவதாக கூறவும் நான்தான் நயன்தாரா என்ற பெயரை பரிந்துரை செய்ததாகவும் அந்த பெயரைத்தான் சத்யன் அந்திக்காடு வைத்தார் என்றும் ஜான் பிரிட்டோ தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

ஆனால் இந்த கருத்தை இயக்குனர் சத்யன் அந்திக்காடு மறுத்துள்ளார். நாங்கள் ’மனசினக்கரே’ படப்பிடிப்பில் இருந்தபோது நானும் படத்தின் திரைக்கதை ஆசிரியர் பிரமோத் என்பவருக்கு டயானாவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பட்டியலிட்டதாகவும், அந்த பட்டியலை டயானாவிடம் கொண்டுபோய் காண்பித்ததாகவும், அவர்தான் நயன்தாரா என்ற பெயரை தேர்வு செய்ததாகவும், இந்த பெயரை தேர்வு செய்ததற்கும் ஜான் டிட்டோவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் பதில் கொடுத்துள்ளார்

மொத்தத்தில் நயன்தாரா என்ற பெயரை யார் வைத்தது? என்ற சர்ச்சை இன்னும் தீராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.