விஜய் யாருக்கு ஓட்டு போடும் போது புகைப்படம் எடுத்த நபர் யார்? உளவுத்துறைக்கு தகவல் சென்றுவிட்டதா?

  • IndiaGlitz, [Friday,April 19 2024]

தளபதி விஜய் இன்று வாக்கு செலுத்தி கொண்டிருந்தபோது காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் புகைப்படம் எடுத்ததாகவும் இதனால் அவர் யாருக்கு ஓட்டு போட்டார் என்ற தகவல் அவருக்கு தெரிந்து விட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு குடிமகன் தன்னுடைய வாக்கை செலுத்தும் நிலையில் அவர் யாருக்கு ஓட்டு போட்டார் என்பதை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது அவரது தனிப்பட்ட உரிமை என்பதால் அதில் யாரும் தலையிடக்கூடாது என்பது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒரு விதிமுறை ஆகும்.

இந்த நிலையில் தளபதி விஜய் இன்று வாக்கு செலுத்த வாக்கு சாவடிக்கு வந்த போது நூற்றுக்கணக்கான கேமராக்கள் அவரை சுற்றி இருந்ததால் அவர் மிகவும் கஷ்டப்பட்டு தான் வாக்கு சாவடிக்கு சென்றார். வாக்குச்சாவடிக்குள் சென்ற பின்னரும் அவர் ஓட்டு போடுவதை புகைப்படம் எடுக்க கேமராமேன்கள் குவிந்தனர் என்பதும் ஒரு கட்டத்தில் அவர் யாருக்கு வாக்களிக்க போகிறார் என்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு கேமராக்கள் உயர்த்தி பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் கேமராமேன்களை தள்ளி நிற்க சொல்லி விஜய் தனிப்பட்ட முறையில் வாக்களிக்க அவர் ஏற்பாடு செய்து கொடுத்தார். அதனை அடுத்து தான் விஜய் தனது வாக்கை செலுத்தி கொண்டிருந்த நிலையில் விஜய் அருகே நின்ற காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் விஜய் யாருக்கு ஓட்டு போட்டார் என்பதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

அவர் சாதாரணமாகத்தான் வீடியோ எடுத்தாரா? அல்லது உளவுத்துறையை சேர்ந்தவரா? விஜய் யாருக்கு ஓட்டு போட்டார் என்பதை யாருக்காவது தெரிவிக்க வகையில் வீடியோ எடுத்தாரா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் விஜய் ஓட்டு போட்டதை வீடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More News

மனைவிக்கு கிடைத்தது எனக்கு கிடைக்கலையே..! ஓட்டு போட சென்ற சூரிக்கு ஏற்பட்ட மனவேதனை..!

இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் வாக்களித்தனர் என்றும் அது குறித்த புகைப்படங்கள்

ஓட்டு போட வந்தபோது என்ன ஆச்சு? த்ரிஷாவுக்கு அதிர்ச்சி..!

நடிகை த்ரிஷா இன்று தனது வாக்கை பதிவு செய்ய வந்தபோது பெண் காவலர் ஒருவர் கீழே விழுந்து விட்டதை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஜோதிகா எந்த நாட்டில் இருக்கிறார்? பனிச்சாரலில் ஒரு க்யூட் வீடியோ..!

நடிகை ஜோதிகா பனிச்சாரல் உள்ள பகுதியில் எடுக்கப்பட்ட அழகிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கல் குவிந்து வருகிறது.

முதல்முறையாக நீச்சல் குளம்.. நடிகை சாயிஷா வெளியிட்ட க்யூட் புகைப்படம்..!

நடிகை சாயிஷா தனது மகளுக்கு முதல்முறையாக நீச்சல் குளத்தை காண்பித்துள்ளதாக வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

செல்வ வளம் பெருக உதவும் மந்திரங்கள்

ஓம் ஸ்ரீம் கணேசாய நமஹ ஓம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியே நமஹ