ஜெ. பிறந்த நாளில் சசிகலா கடிதமே எழுதவில்லையா? அப்படியானால் எழுதியது யார்?

  • IndiaGlitz, [Saturday,February 25 2017]

நேற்று தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் சிறையில் இருந்து சசிகலா, அதிமுக தொண்டர்களுக்காக ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு எழுதியதாக ஒரு கடிதம் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது. ஆனால் தற்போது ஜெயலலிதாவின் பிறந்த நாள் தொடர்பாக சசிகலா சிறையில் இருந்து கடிதம் எதுவும் அனுப்பவில்லை என பெங்களூரு சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அப்படியானால் அந்த கடிதத்தை எழுதியவர் யார்? என்ற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

இது குறித்து பரப்பன அக்ரஹாரா சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் அவர்கள் கூறியபோது, 'இரு தினங்களாக சசிகலாவை யாரும் சந்திக்கவில்லை. அவரும் சிறையில் இருந்து நேற்று யாருக்கும் கடிதம் எழுதவில்லை. ஒருவேளை முன்கூட்டியே எழுதி தரப்பட்ட கடிதமாக இருக்கலாம். சசிகலா அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் சிறைத்துறை மூலமாகவே கடிதங்கள் எழுதலாம். அதற்கு எந்த தடையும் இல்லை” என்று கூறினார்.

இதுகுறித்து கர்நாடக அதிமுகவினர் தரப்பின் கூறியபோது, 'க‌டந்த திங்கள் அன்று சசிகலாவை அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்து பேசியபோது சசிகலா இந்த கடித‌த்தைக் கொடுத்திருக்கலாம், அல்லது கட்சித் தலைமையே இந்தக் கடிதத்தை எழுதி இருக்கலாம்” என்று கூறினர்.

சசிகலா கடிதம் எழுதவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அந்த கடிதத்தை உண்மையில் எழுதியது யார்? என்ற விபரத்தை ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் கூற வேண்டிய நிலை அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி பட வசன டைட்டிலில் உருவாகும் நட்டி நட்ராஜின் படம்

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வித்தியாசமான தலைப்புகளில் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் ரஜினி பட தலைப்புகள், ரஜினியின் வசனங்களையே தலைப்புகளாக கொண்ட படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்து. அந்த வகையில் 'இது எப்படி இருக்கு', 'என் வழி தனி வழி' , 'கதம் கதம்'  ,'போடா ஆண்டவனே நம்ம பக்கம்' ஆகிய தலை

பாவனாவை கடத்தியது ஏன்? சுனில்குமாரின் அதிர்ச்சி வாக்குமூலம்

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் தென்னிந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நான்குபேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியும், பாவனாவின் முன்னாள் டிரைவருமான சுனில்குமார் நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்...

பிரேம்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இசைக்குடும்பத்தில் பிறந்த கங்கை அமரன் அவர்களின் மகனும், 'மங்காத்தா' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயற்றிய இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் நமது சார்பில் அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்...

சிபிராஜின் 'கட்டப்பாவை காணோம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

'நாய்கள் ஜாக்கிரதை', 'ஜாக்சன் துரை' படங்களை அடுத்து சிபிராஜ் நடித்து வந்த படம் 'கட்டப்பாவை காணோம்'. வித்தியாசமான டைட்டிலை கொண்ட இந்த படத்தை மணிசெய்யான் இயக்கி வந்தார்...

ஆர்யா-ராணா-விஷால். த்ரிஷாவுக்கு பிடித்த ஹீரோ யார்?

பிரபல நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டு பிரச்சனையின்போது சமூக வலைத்தளத்தில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருந்தார் என்பது தெரிந்ததே. தற்போது மீண்டும் அந்த தளத்தில் புகுந்துள்ள த்ரிஷா, சற்று முன்னர் ரசிகர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தார். இதோ ரசிகர்களின் கேள்வியும், த்ரிஷாவின் பதில்களும்...