ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய் நடிப்பது ஏன்?

  • IndiaGlitz, [Sunday,October 04 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் திடீரென வருமான வரித்துறையினர்களின் சோதனை காரணமாக ரிலீஸுக்கு சிக்கல் ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். இந்த பிரச்சனையை தீர்க்க பலர் முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும், இந்த படம் சுமூகமாக ரிலீஸாக உதவியதில் பெரும்பங்கு ஏ.எம்.ரத்னம் அவர்களுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

குஷி, கில்லி, சிவகாசி ஆகிய மூன்று சூப்பர் ஹிட் விஜய் படங்களை இயக்கிய ஏ.எம்.ரத்னம், அதன்பின்னர் அஜீத்தின் கோட்டைக்குள் நுழைந்து ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்களை தயாரித்தார். இருப்பினும், திரையுலகில் யாருக்காவது ஏதேனும் பிரச்சனை என்றால் தானாகவே முன்வந்து உதவும் குணமுடைய ஏ.எம்.ரத்னம், விஜய்யின் 'புலி' சுமூகமாக ரிலீஸ் ஆக விநியோகிஸ்தர்கள் மற்றும் ஃபைனான்சியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதன்பின்னரே 'புலி' ரிலீஸ் ஆனதாகவும் கூறப்படுகிறது.

கடைசி நேரத்தில் ஏ.எம்.ரத்னம் செய்த உதவிக்கு நன்றிக்கடனாகவே விஜய் அவர் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.

More News

'நானும் ரவுடிதான்' நயன் கேரக்டர். இதுவரை வெளிவராத தகவல்

தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடித்துள்ள 'நானும் ரெளடிதான்' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளதாக கூறப்படுகிறது...

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'தனி ஒருவன்' ரவி?

அனேகன் வெற்றி படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஹீரோ யார்? என்பது குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது...

ரஜினி படம் என்றால் குணசித்திர வேடத்திற்கு தயார். ஹன்சிகா

திரையுலகில் நுழையும் அனைத்து நடிகைகளுக்கும் ரஜினி, கமல், அஜீத் மற்றும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும்...

'விஜய் 60' படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்?

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் ஏ.எம்.தயாரித்து வரும் 'வேதாளம்' திரைப்படம் இன்னும் ஓரிருநாட்களில் படப்பிடிப்பு முடியுந்தருவாயில் உள்ளது...

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் 'ரஜினிமுருகன்' நாயகி?

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், இதே ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது...