close
Choose your channels

பெயரை மாற்றியது ஏன்? மனம் திறந்த நயன்தாரா பட நாயகன்!

Saturday, January 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா நடித்த ’மாயா’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த நடிகர் ஆரி சமீபத்தில் தனது பெயரை ஆரி அருஜூனா என்று மாற்றினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இனிமேல் தன்னுடைய பெயரை ஆரி அருஜூனா என்று அழைக்குமாறு அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் பத்திரிகையாளர்களிடம் அன்புடன் கேட்டுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தனது பெயரை மாற்ற காரணம் என்ன என்பது குறித்து பேட்டி ஒன்றில் ஆரி அருஜூனா தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் ஆதி, ஆரியா, ஆரி என ஒரே மாதிரியான பெயர்கள் இருப்பதால் குழப்பம் ஏற்படுவதாகவும், தன்னுடைய நண்பர்கள் சிலரே தன்னை ஆதி என்று அழைப்பதை தான் பார்த்திருப்பதாகவும், எனவே இந்த குழப்பத்திற்கு முடிவு கட்டவே தன்னுடைய பெயரை ஆரி அருஜூனா என்று மாற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் ’ஆல்பர்ட் ராஜா’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரி அருஜூனா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அமரகாவியம் மற்றும் எமன் ஆகிய படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கவுள்ளார். அதிரடி ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் ஒரு இளைஞனுக்கு திடீரென எதிர்பாராத பிரச்சனை வருவதாகவும் அந்த பிரச்சனையை அவன் எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் கதை என்றும் கூறப்படுகிறது இந்த படத்தில் நாசர், யோகிபாபு, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் கொலைகாரன் படத்திற்கு இசையமைத்த சைமன்கிங் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.