close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் இருந்து விலகியது ஏன்? ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

Saturday, August 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் சமீபத்தில் இணைந்த ரகுல் ப்ரீத்திசிங் மற்றும் ப்ரியா பவானிசங்கர் ஆகியோர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியதாக செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்தபோது, 'பிற படங்களில் ஏற்கனவே கமிட் ஆகியிருந்ததால் 'இந்தியன் 2' படக்குழுவினர் கேட்ட தேதிகளை தன்னால் கொடுக்க முடியவில்லை என்றும், எனவே வருத்தத்துடன் இந்த படத்தில் இருந்து விலகுவதாகவும், இந்த படத்தை தான் மிகவும் மிஸ் செய்வதாகவும், குறிப்பாக ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை இழந்ததாகவும் இருப்பினும் இருவருடனும் எதிர்காலத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது 'நம்ம வீட்டு பிள்ளை', துருவ நட்சத்திரம், வானம் கொட்டட்டும், கருப்பர் நகரம், மகளிர் அனி, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படம், விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு தெலுங்கு படம் என சுமார் ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.