அஜித்-விஜய் சந்திப்பு நடந்தும் ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை.. காரணம் இதுதானா?

  • IndiaGlitz, [Saturday,March 25 2023]

பொதுவாக விஜய் ஒரு சிறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கூட அதன் புகைப்படம் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அஜித்துடன் விஜய் சந்தித்த முக்கிய நிகழ்வு குறித்த ஒரு புகைப்படம் கூட வெளியே வராதது பெரும் ஆச்ச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று அஜித்தின் தந்தை சுப்ரமணியம் அவர்கள் காலமானார் என்பதும், அவரது மறைவுக்கு பல திரையுலக, அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் அஜித்தின் தந்தை மறைவு செய்தியை கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்த விஜய், அஜித்தை நேரில் சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த நிகழ்வை தனது குடும்ப நிகழ்வாக நடத்த திட்டமிட்டுள்ளதாக அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் தெரிவித்திருந்த நிலையில் இதை ஒரு பப்ளிசிட்டியாக மாற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதேபோல் அஜித்தின் சந்திப்பை எந்தவித பப்ளிசிட்டியும் செய்ய வேண்டாம் என்று விஜய் தன்னைச் சேர்ந்தவர்களிடம் கண்டிப்பாக கூறியிருந்ததாகவும் அதனால் தான் அஜித் - விஜய் சந்திப்பு குறித்த ஒரு புகைப்படம் கூட வெளியே வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

அஜித் விஜய் இடையே திரையுலகில் போட்டி இருந்தாலும் இருவரும் பல ஆண்டுகளாக நெருக்கமான நண்பர்களாக உள்ளனர். இருவரும் அவ்வப்போது குடும்பத்துடன் சந்தித்து வருவதாகவும் கூறப்படும் நிலையில் இருவரும் இணைந்த புகைப்படங்கள் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷ் படம் குறித்து எச்.வினோத் கூறிய மாஸ் தகவல்.. 'சதுரங்க வேட்டை' இரண்டாம் பாகமா?

 எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

படப்பிடிப்பில் விபத்து… நடிகர் அக்ஷய் குமாருக்கு காயம் !

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சண்டை காட்சி ஒன்றில் நடித்தபோது விபத்துக்குள்ளாகி முழங்காலில் காயம்

விஜயகாந்த் மகன் ஹீரோ, அனுராக் காஷ்யப் வில்லன்.. 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குனராகும் பிரபலம்..!

 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனராகும் பிரபலம் ஒருவர் விஜயகாந்த் மகன் ஹீரோவாகவும் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்க இருக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

சிம்புவின் 'பத்து தல' டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை பெற்ற நிறுவனங்கள் இவைதான்..!

 சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

ராஷ்மிகா மந்தனாவின் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சிரஞ்சீவி..!

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்துத் துவக்கி வைக்க, ஜீவி பிரகாஷ் இசையில், நிதின், ராஷ்மிகா மந்தனா, வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் திரைப்படம் பிரமாண்டமாகத் துவங்கியது !!