close
Choose your channels

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிடலை: செஃப் தாமு

Saturday, April 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலமானதற்கு ‘குக்’கள் மற்றும் கோமாளிகள் மட்டுமின்றி இரண்டு நடுவர்களும் காரணம் என்பதை மறுக்கவே முடியாது. வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகிய இருவரும் சமையல் கலையை நிபுணர்கள் என்பதும் மிக சிறப்பாக தங்களது நடுவர் பணியைச் செய்தார்கள் என்பதும் தெரிந்ததே. அதேபோல் கோமாளிகளுக்கு இணையாக சில சமயம் நடுவர்களும் காமெடி செய்தது இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தமிழில் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து கன்னடத்தில் ’குக் வித் கிறுக்கு’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி தொடங்க உள்ளது என்பதும், இந்த நிகழ்ச்சியின் புரமோ சமீபத்தில் வெளியான நிலையில் அதிலும் வெங்கடேஷ் பட் நடுவராக கலந்து கொண்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

ஆனால் அதே நேரத்தில் இன்னொரு நடுவரான தாமு அதில் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. இது குறித்து தாமு கூறிய போது ’குக் வித் கோமாளி’ கன்னட ரீமேக்கில் வெங்கடேஷ் இருக்கும் போது நீங்கள் இல்லையா? என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். வெங்கடேஷ் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எனக்கும் கன்னட மொழி தெரியும், ஆனால் எனக்கு அழைப்பு வரவில்லை. ஒருவேளை எனக்கு அழைப்பு வந்திருந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.