close
Choose your channels

'கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் கலந்து கொள்ளாதது ஏன்?

Sunday, December 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச்சிலை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படவுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட பிரபல தேசிய தலைவர்களும், மாநில தலைவர்களும் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என செய்திகள் வெளிவந்துள்ளது.

கமல்ஹாசன் தனது கட்சி சார்ந்த சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே நேரம் ஒதுக்கியதால் அவர் மதுரை செல்வதாகவும், மதுரையில் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை தான் அவர் சென்னை திரும்பவுள்ளதால் இன்றைய கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.