இந்திய அணி ஒப்பந்தத்தில் நடராஜன் இடம்பெறாததற்கு இதுதான் காரணமா?

இந்திய கிரிக்கெட் அணியின் வருடாந்திர ஒப்பந்தத்தில் தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் பெயர் ஒப்பந்தத்தில் இருக்கும் நிலையில் நடராஜனுக்கு மட்டும் இடம் அளிக்காதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் நடராஜன் பெயர் வருடாந்திர ஒப்பந்தத்தில் இடம் இருப்பதற்கு உண்மையான காரணம் இதுதான்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இடம் பெற வேண்டும் என்றால் குறைந்தது மூன்று டெஸ்டுகள் அல்லது ஏழு ஒருநாள் போட்டி அல்லது 10 டி20 போட்டிகளில் ஆடி இருந்தால் மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்படும். எனவே நடராஜன் அடுத்தடுத்து அதிக போட்டிகளில் விளையாடும் நிலையில் அடுத்த ஆண்டு முதல் அவரது பெயர் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இடம்பெற வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனால்தான் நடராஜன் பெயர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை என்றும் மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என்றும் விவரம் அறிந்த நெட்டிசன்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்

More News

புதிய நோய்கள்… சென்னைக்கு புயல் பாதிப்பு… புத்தாண்டு குறித்த பஞ்சாங்கப் பலன்களால் பரபரப்பு!

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி ஒவ்வொரு வருடமும் ராமேஸ்வரம் கோவில் சன்னிதானத்தில் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி அந்தக் கோவில் நிர்வாகம் சார்பாக நடத்தப்படுகிறது.

ஐபிஎல் போட்டியில் பிஹு டான்ஸ் ஆடி மகிழ்ந்த இளம் வீரர்... வைரல் வீடியோ!

நேற்றைய ஐபிஎல் போட்டியின்போது ஒரு விக்கெட்டை வீழ்த்தியதற்காக கிரிக்கெட் கிரவுண்டிற்குள் இருந்து கொண்டே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த இளம் வீரர் ரியான் பராக் நடனம் ஆடி மகிழ்ந்து இருக்கிறார்

காமெடி நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி: என்ன காரணம்?

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடக்க ஆட்டக்காரர்களை மாற்றுவாரா தோனி? இன்று பஞ்சாபுடன் பலப்பரிட்சை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டியான இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம் இருக்குமா?

நேற்று புகார் அளித்த நடிகை ராதா இன்று வாபஸ்: என்ன நடந்தது?

தன்னுடைய இரண்டாவது கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக நேற்று 'சுந்தரா டிராவல்ஸ்' நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்