close
Choose your channels

சூர்யா- கார்த்தி படத்தை இயக்காததற்கு இதுதான் காரணம்: லோகேஷ் கனகராஜ்

Saturday, August 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த ஐடியா தனக்கு வந்ததாகவும் இதுகுறித்து தயாரிப்பாளரிடம் ஆலோசனை செய்ததாகவும் ஆனால் அது நடைபெறாமல் போனதற்கான காரணம் இதுதான் என்றும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்தபோது, சூர்யா மற்றும் கார்த்தி இணையும் படத்தை இயக்க திட்டமிட்டதாக கூறினார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அய்யப்பனும் கோஷியும்’ என்ற திரைப்படத்தை பார்த்த உடன் பிஜூ மேனன் கேரக்டரில் சூர்யாவும் பிரித்திவிராஜ் கேரக்டரில் கார்த்தியையும் நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தேன். இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, சூர்யா மற்றும் கார்த்தியுடன் பேசினேன். ஆனால் ’அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் ரீமேக் உரிமையை வேறு ஒருவரிடம் சென்று விட்டதாக அறிந்தவுடன் அந்த முடிவை நாங்கள் கைவிட்டு விட்டோம்’ என்று தெரிவித்தார்.

பொதுவாக தனக்கு ரீமேக் படங்கள் இயக்கும் ஐடியா இல்லை என்றும், ஒருவேளை ரீமேக் செய்ய நினைத்தால் ‘ஊமை விழிகள்’ , ‘இணைந்த கைகள்’ போன்ற படத்தை ரீமேக் செய்ய ஆசை என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.