close
Choose your channels

ரகசிய திருமணம் ஏன்? யோகிபாபு விளக்கம்

Friday, February 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் யோகிபாபு பார்வையை நேற்று முன்தினம் தனது குலதெய்வம் கோவிலில் மஞ்சுபார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த திருமணம் வெகு சிலரின் முன்னிலையில் ரகசியமாக நடந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்

எதிர்பாராத குடும்ப சூழல் காரணமாக அவசர நிலையில் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், அதனால் யாருக்கும் முறைப்படி திருமண அழைப்பு கொடுக்க முடியவில்லை என்றும் அதனால் தனக்கு மிகுந்த வருத்தம் என்றும் தெரிவித்துள்ளார்

தன்னுடைய குடும்ப சூழ்நிலையை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று தான் நம்புவதாகவும், அனைவரின் வாழ்த்துக்களை பெற முடியவில்லை என்ற வருத்தம் தனக்கு இருப்பதாகவும் யோகிபாபு குறிப்பிட்டுள்ளார்

மேலும் திருமணத்திற்கு யாரையும் அழைக்க முடியாவிட்டாலும் சென்னையில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் முறைப்படி அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்த மீடியாக்கள் மற்றும் சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.