கருணாநிதி ஆட்சி தருவேன்' என்று ஸ்டாலின் சொல்லாதது ஏன்? 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்காக அதிமுக, திமுக இரு கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இரு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து கொண்டிருக்கும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை ஓரங்கட்டி வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

நான் கலைஞரின் மகன் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை பெருமையாக பேசி வந்த ஸ்டாலின், தற்போது கலைஞரின் ஆட்சியை தருவேன் என்று ஒரு இடத்தில் கூட அவர் பிரச்சாரத்தின்போது செல்லவில்லையே? அது ஏன்? என்று கேள்வியை திமுக கூட்டணிக்கு எதிராக போட்டி போடும் அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம். காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறும் திமுகவினர் ஏன் கருணாநிதி ஆட்சி அமைப்போம் என்று கூறவில்லை? என்ற கேள்வியையும் அவர்கள் எழுந்துள்ளனர். கருணாநிதி என்ற மாபெரும் தலைவரின் மகன் என்பதால் தான் ஸ்டாலினுக்கு தற்போது திமுக தலைவர் என்ற இடம் கிடைத்துள்ளது என்பதும், முதலமைச்சர் வேட்பாளர் என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது என்றும், ஆனால் தனது தந்தையான கருணாநிதியை அவர் மறந்து விட்டு, அவர் செய்த மக்கள் நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லாமல், தனிப்பட்ட முறையில் தன்னை மட்டுமே முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பது ஏன் என்றும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் ஸ்டாலின் ஒரு முறை கூட இன்னும் முதலமைச்சராக அமராத நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத நிலையிலும் நான்கு ஆண்டுகள் அரசையும் கட்டிக்காத்து கட்சியையும் உடையாமல் பாதுகாத்து வரும் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி ஸ்டாலின் கேள்விக்கணைகளை வீசுவது சரியா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.

More News

தனுஷும் 'குக் வித் கோமாளி' போட்டியாளரும் ஒரே பள்ளியில் படித்தவர்களா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. குக் வித் கோமாளி சீசன் 1ஐ விட சீசன் 2 மிகப் பெரிய அளவில் பிரபலமாகி விட்டது

'குக் வித் கோமாளி' ஷகிலா மகள் பிக்பாஸ் போட்டியாளரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. அனேகமாக ஜூன் மாதம் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

திமுக-வுக்கு வாக்களித்தால், உங்கள் கதை முடிந்துவிடும்...! ராமதாஸ் பிரச்சாரம்...!

எடப்பாடியில் முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த, ராமதாஸ் திமுகவுக்கு வாக்களித்தால் உங்கள் கதை முடிந்துவிடும் என்று கூறி  பிரச்சாரம் செய்தார்.

நல்லவருக்கு ஓட்டுப்போடுங்கள்...! அதிமுக-விற்கு  வாக்கு சேகரித்த வாசன்....!

'பொல்லாதவர்களுக்கு வாக்கு போடாதீர்கள், நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்' என்று தமாகா  தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தமிழிசையால் புதுச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்...!

சாலையில் விபத்து நேர்ந்த ஒருவருக்கு, முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.