close
Choose your channels

இறந்த கணவரின் உயிர்த்தடத்தில் ரத்தம்: மனைவி செய்த செயலால் அதிர்ந்த போலீசார்!

Saturday, August 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மதுரை அருகே திடீரென வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் அவரது மனைவி செய்த செயலால் தான் அவர் இறந்தார் என்ற தகவலால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் என்ற பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவருக்கு அருள்செல்வி என்ற மனைவியும் ஜெயஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். சுந்தர் மதுரையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகவும், அருள்செல்வி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகவும் வேலை பார்த்து வந்தனர்

இந்த நிலையில் சுந்தருக்கு அடிக்கடி குடிப்பழக்கம் இருந்ததால் தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை திடீரென சுந்தர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சுந்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பின்னர் அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவரது உயிர்த்தடத்தில் ரத்தம் இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர்

போலீசார் உடனடியாக வந்து சுந்தரின் நிலைமை தெரிந்தது அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து சுந்தரின் மனைவி அருள்செல்வியை விசாரணை செய்த போது தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை தந்ததாகவும் ஒரு கட்டத்தில் பாலியல் வன்முறையில் கணவன் ஈடுபட்டதாகவும் அதனால் கணவனின் உயிர்த்தடத்தில் அடித்தே கொலை செய்ததாக கூறியுள்ளார்

இதனை அடுத்து சுந்தரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பாலியல் தொல்லை கொடுத்த கணவரை மனைவியே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.