close
Choose your channels

கணவனால் விரக்தி… தலையை அறுத்து எடுத்துக்கொண்டு காவல்நிலையம் வந்த மனைவி!

Friday, January 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆந்திரமாநிலம் சித்தூரில் குடும்பத் தகராறில் கடும் கோபம் அடைந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய கணவனின் தலையை அறுத்து அதைப் பையில் வைத்துக்கொண்டு காவல்நிலையம் வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர் அடுத்த ரேணிகுண்டா பகுதியில் வசித்துவந்தவர் ரவிச்சந்திரன்(53). இவருடைய மனைவி வசுந்தரா(50). இந்தத் தம்பதிகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக மனக்கசப்பு இருந்துவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார். இந்நிலையில் இந்தத் தம்பதியின் 20 வயது மகனும் பணிக்குச் சென்றநிலையில் நேற்று திடீரென தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் கடும்கோபம் அடைந்த வசுந்தரா அருகில் இருந்த ஒரு கட்டையை எடுத்து தனது கணவனைத் தாக்கியிருக்கிறார். மேலும் மயங்கிவிழுந்த அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து தனியே எடுத்து அதை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார். ரத்தக்கறை படிந்த உடையுடன் வசுந்தரா பொதுவெளியில் நடமாடியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் காவல் நிலையம் வந்த வசுந்தராவைப் பார்த்து பதறிய போலீசார் அவருடைய பையில் கழுத்து அறுக்கப்பட்ட தலை இருந்ததைப் பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய வசுந்தராவின் மகன், எனது அம்மா கடந்த சில மாதங்களாகவே கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இதனால் புத்தித்தடுமாறிய நிலையில் இந்தக் காரியத்தைச் செய்துவிட்டார் எனக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் ஆந்திரா பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.