கண்டக்டருடன் மனைவி கள்ளக்காதல்: கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்த கணவர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மதுரை அருகே உசிலம்பட்டி என்ற பகுதியை சேர்ந்த கருப்பையா-கீதா தம்பதியருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். கருப்பையா மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் மனைவி கீதாவுக்கு வீட்டிலேயே டீக்கடை ஒன்றை கருப்பையா வைத்து கொடுத்துள்ளார். இந்த டீக்கடைக்கு அடிக்கடி டீ குடிக்க வரும் அரசு பேருந்தில் பணிபுரியும் கண்டக்டர் ஆனந்த்குமார் என்பவருக்கும் கீதாவுக்கும் நாளடைவில் கள்ளக்காதல் ஏற்பட்டது
இதுகுறித்து கருப்பையா மனைவிக்கு அறிவுரை கூறியும் போலீசில் புகார் அளித்தும் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் கணவருடன் சண்டை போட்டு கீதா தாய் வீட்டுக்கு சென்று அங்கிருந்தவாறே கண்டக்டருடனான கள்ளக்காதலை தொடர்ந்தார். இதனால் வேலை, டீக்கடை, இரண்டு மகள்களை கவனிக்கும் பொறுப்பு ஆகிய அனைத்தும் கருப்பையா மீதே விழுந்தது
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் மனம் வெறுத்த கருப்பையா வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார். கணவர் மற்றும் மகள்களின் தற்கொலை செய்தியை கேட்ட கீதா, கள்ளக்காதலனுடன் தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்களை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.