close
Choose your channels

தினமும் உறவுக்கு அழைத்த கணவனை கொன்று பிரிட்ஜில் வைத்த மனைவி!

Monday, June 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து உறவுக்கு அழைத்த கணவனை, கொலை செய்த மனைவி கணவரின் பிணத்தை பிரிட்ஜில் வைத்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று திருவள்ளூர் அருகே நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள நொச்சிலி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் தினமும் மதுபோதையில் இரவில் வீட்டுக்கு வந்து அவரது மனைவி முனியம்மாள் என்பவரை உறவுக்கு அழைத்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளாராம். இதனையடுத்து ஒருநாள் திடீரென தனது கணவருக்கு உடல்நலமில்லை என்று கூறி அவரை ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார் முனியம்மாள். பின்னர் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாகாவும் கூறி இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

முருகேசனின் இறுதிச்சடங்கிற்கு வந்த உறவினர்கள் அவருடைய கழுத்தில் காயம் இருப்பதை பார்த்ததும் சந்தேகம் அடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து முனியம்மாளை விசாரணை செய்தபோது தனது கணவர் முருகேசன் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை கொடுமை செய்ததால் தனது அண்ணனின் உதவியுடன் கணவரை கொலை செய்து பிணத்தை பிரிட்ஜில் வைத்ததாகவும், அதன்பின்னர் அவர் இறந்து விட்டதாக பொய் சொல்லி ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். முனியம்மாளிடம் வாக்குமூலத்தை பெற்ற போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.