close
Choose your channels

மாமியாரிடம் சமரசம் பேச சென்ற கணவரை கொலை செய்த மனைவியின் கள்ளக்காதலன்! 

Saturday, September 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாமியாரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற கணவரை அவரது மனைவியின் கள்ளக்காதலன் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விருதுநகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் மதுரையை சேர்ந்த ஜோதிலட்சுமி என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜோதிலட்சுமி பெற்றோர்கள் சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கியதால் ஜோதிலட்சுமி தனது பெற்றோரை பார்த்துக் கொள்வதற்காக சொந்த ஊர் சென்றார். அவருக்கு உதவியாக அந்த பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் இருந்துள்ளார்

கார்த்திக் மற்றும் ஜோதிலட்சுமி இடையேயான உறவு நட்பாக மாறி நாளடைவில் காதலர்களாகவும் மாறி உள்ளதாக தெரிகிறது இந்த நிலையில் பெற்றோர்கள் குணமடைந்து வீடு திரும்பிய பின் தனது கணவர் வீட்டிற்கு திரும்பிய ஜோதிலட்சுமி, அதன் பின்னரும் கார்த்திக்குடன் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார்

இந்த விவகாரம் கணவர் மணிகண்டனுக்கு தெரியவர அவர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு முற்றி ஒரு கட்டத்தில் தனது குழந்தையுடன் ஜோதிலட்சுமி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் ஜோதிலட்சுமி தனது கள்ளக்காதலன் கார்த்திக் மற்றும் சிலரை அழைத்துக்கொண்டு கணவரின் வீட்டுக்குச் சென்று தனது தாயார் சமரசம் செய்ய அழைப்பதாக கூறினார்

மாமியார் வீட்டுக்கு சமரசம் பேச சென்ற மணிகண்டன் அங்கு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டனின் பெற்றோர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஜோதிலட்சுமி வீடு அருகே உள்ள ஒரு புதரில் மணிகண்டனின் பிணம் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

இதுகுறித்து ஜோதிலட்சுமி மற்றும் அவருடைய பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்ததாக கருதப்படும் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை போலீசார் தேடி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் கார்த்திக் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மட்டுமின்றி ஜோதிலட்சுமி மற்றும் அவருடைய பெற்றோர்களும் மணிகண்டனின் கொலைக்கு உடந்தை என மணிகண்டனின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.