close
Choose your channels

கண்ணாமூச்சி விளையாடி கணவரை கொலை செய்த இளம்பெண்

Tuesday, October 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் அனிதா என்ற இளம்பெண்ணுக்கு கதிரவன் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்பே அனிதாவுக்கு ஒரு காதலன் இருந்ததாக தெரிகிறது. இதனையறிந்த அனிதாவின் பெற்றோர் அவருக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்து கதிரவனுடன் சென்னை திருவான்மியூர் பகுதிக்கு வந்த அனிதா கடந்த சில நாட்களாக நல்லமுறையில் குடும்பம் நடத்தியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று இருவரும் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர். அப்போது கதிரவன், அனிதா இருவரும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடினர். கதிரவன் கண்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் திடீரென வந்த ஒருசில மர்ம நபர்கள் கதிரவனை கடுமையாக தாக்கிவிட்டு அனிதாவின் நகைகளை பறித்து சென்றனர். படுகாயம் அடைந்த கதிரவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இந்த நிலையில் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. அனிதாவே தனது காதலனை வரவழைத்து நகைக்கொள்ளை நாடகம் ஆடி கதிரவனை கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அனிதா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கதிரவன் சிகிச்சையின் பலனின்றி இன்று மரணம் அடைந்துவிட்டதால் அனிதா மற்றும் அவரது காதலன் ஜெகன் ஆகியோர் மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது திருமணம் ஆகி 25 நாட்களே ஆன நிலையில் மனைவியே கள்ளக்காதலன் துணையுடன் கணவரை கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.