close
Choose your channels

கணவனை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த மனைவி: மகள்-மகனும் உடந்தை

Sunday, November 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாத்தூர் அருகே கணவரை அவரது மனைவியே கொலை செய்து மகள் மற்றும் தாய் உதவியுடன் வீட்டின் தோட்டத்தை புதைத்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சாத்தூர் அருகே 55 வயது சுப்புராஜ் என்பவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி பிச்சையம்மாளை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சுப்புராஜ் மனைவியிடம் தகராறு செய்தபோது நடந்த கலகலப்பில் சுப்புராஜ் படுகாயம் அடைந்து மயக்கமானார்.

ஆனால் சுப்புராஜ் இறந்துவிட்டதாக கருதிய பிச்சையம்மாள் வீட்டின் தோட்டத்தில் குழி தோண்டி, தன்னுடைய மகள் மற்றும் மகன் உதவியால் புதைத்துவிட்டார். இதனையடுத்து கணவர் கேரளாவிற்கு வேலை தேடி கேரளாவுக்கு சென்றிருப்பதாக கணவரின் உறவினர்களிடம் கூறி அனைவரையும் நம்ப வைத்தார்.

இந்த நிலையில் தீபாவளிக்கு கூட சுப்புராஜ் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த சுப்புராஜின் உறவினர்கள் போலீசில் புகார் அளிக்க, போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தனது கணவரை கொலை செய்ததாக பிச்சையம்மாள் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிச்சையம்மாளை கைது செய்த போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மகனையும்மகளையும் கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.