close
Choose your channels

பிரியாணி வாங்கித்தர மறுத்த கணவன், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மனைவி தற்கொலை!

Friday, June 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கணவர் பிரியாணி வாங்கித் தரவில்லை என்ற கோபத்தால் மனைவி தீவைத்து தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி என்ற பகுதியில் உள்ள மனோகரன் என்பவருக்கு சௌமியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் சமீபத்தில் வீட்டின் உரிமையாளர் மனோகரனிடம் பிரியாணி வாங்கித் தருமாறு கூறி பணம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து மனோகரனின் மனைவி தனக்கும் பிரியாணி வேண்டும் என்று கூறவே ஊரடங்கு நேரத்தில் வருமானம் இல்லாததால் பிரியாணி வாங்க பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சிறிய அளவில் வாக்குவாதம் நடந்துள்ளது.

இந்த நிலையில் சௌமியா பிரியாணி கேட்டு அடம் பிடித்ததால், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று மணிகண்டன் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சௌமியா பைக்கில் இருந்த பெட்ரோலை பிடித்து மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டார். இதனால் தீயினால் படுகாயமடைந்த சௌமியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

உயிர் போகும் கடைசி நேரத்தில் தன்னை எப்படியும் கணவர் தடுத்து விடுவார் என்ற என்ற நம்பிக்கையில் அவசரப்பட்டு விபரீத முடிவை எடுத்து விட்டதாகவும் தற்போது கணவரையும் குழந்தைகளையும் விட்டு செல்வது எனக்கு வேதனையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார்.

பிரியாணி வாங்கி தரவில்லை என்பதற்காக தன்னை தானே தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் ஒருவரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.