close
Choose your channels

கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: உயிர் போகும் நிலையில் வீடியோவை வெளியிட்ட கணவர்!

Tuesday, August 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கணவரின் நண்பருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் கணவரையே கொலை செய்ய ஆள் வைத்து அடித்து சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை செனாய் நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் வேலை செய்துவரும் சுரேஷுக்கு, சரண்யா என்ற மனைவியும் 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. திருமணமாகி 10 ஆண்டுகளாக இவர்கள் சந்தோசமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென சுரேஷ் தனது நண்பர் வினோத் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன் பின்னர் அவர் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்ததை அடுத்து வினோத்துக்கும் சரண்யாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு விட்டது. இந்த கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி சுரேஷ் வீட்டில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விஷயம் தெரிந்து சுரேஷ் தனது நண்பனையும் மனைவியையும் கண்டித்துள்ளார். ஆனால் கள்ளக்காதலில் தீவிரமாக இருந்த சரண்யா, ஒரு கட்டத்தில் குழந்தையையும் கணவரையும் விட்டுவிட்டு வினோத்தின் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டார். இதுகுறித்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ், சரண்யா, வினோத் ஆகிய மூன்று குடும்பத்தினர்களும் வந்து சரண்யாவுக்கு புத்திமதி கூறினர். ஆனால் கள்ளக்காதலில் சரண்யா பிடிவாதமாக இருந்ததால் மூன்று குடும்பத்தினர்களும் அவரை அடித்து வெளுத்தனர். அதிகமாக அடித்தது சரண்யாவின் குடும்பத்தினர்தான் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவ்வளவு அடி வாங்கியும் திருந்தாத சரண்யா, மீண்டும் வினோத்துடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதன் நிலையில் திடீரென ஒருநாள் சரண்யா தனது கணவர் சுரேஷை போன் மூலம் அழைத்தார். தனது மனைவி திருந்திவிட்டதாகவும் அதனால் அவரை அழைத்து வந்து குடும்பம் நடத்தலாம் என்ற ஆசையில் சுரேஷ் அவரை பார்க்க சென்றார். அப்போது மறைந்திருந்த வினோத் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக சுரேஷை கத்தியால் குத்தினார்கள். இதனால் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சுரேஷ் வீடியோ ஒன்றை தனது குடும்பத்தாருக்கு அனுப்பி உள்ளார். அதில் தன்னை தாக்கியவர்கள் வினோத் மற்றும் சரண்யா தான் என்றும், தான் ஒருவேளை மரணமடைந்தால் தன்னுடைய மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.