கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: உயிர் போகும் நிலையில் வீடியோவை வெளியிட்ட கணவர்!

  • IndiaGlitz, [Tuesday,August 04 2020]

கணவரின் நண்பருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் கணவரையே கொலை செய்ய ஆள் வைத்து அடித்து சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை செனாய் நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் வேலை செய்துவரும் சுரேஷுக்கு, சரண்யா என்ற மனைவியும் 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. திருமணமாகி 10 ஆண்டுகளாக இவர்கள் சந்தோசமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென சுரேஷ் தனது நண்பர் வினோத் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன் பின்னர் அவர் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்ததை அடுத்து வினோத்துக்கும் சரண்யாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு விட்டது. இந்த கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி சுரேஷ் வீட்டில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விஷயம் தெரிந்து சுரேஷ் தனது நண்பனையும் மனைவியையும் கண்டித்துள்ளார். ஆனால் கள்ளக்காதலில் தீவிரமாக இருந்த சரண்யா, ஒரு கட்டத்தில் குழந்தையையும் கணவரையும் விட்டுவிட்டு வினோத்தின் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டார். இதுகுறித்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ், சரண்யா, வினோத் ஆகிய மூன்று குடும்பத்தினர்களும் வந்து சரண்யாவுக்கு புத்திமதி கூறினர். ஆனால் கள்ளக்காதலில் சரண்யா பிடிவாதமாக இருந்ததால் மூன்று குடும்பத்தினர்களும் அவரை அடித்து வெளுத்தனர். அதிகமாக அடித்தது சரண்யாவின் குடும்பத்தினர்தான் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவ்வளவு அடி வாங்கியும் திருந்தாத சரண்யா, மீண்டும் வினோத்துடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதன் நிலையில் திடீரென ஒருநாள் சரண்யா தனது கணவர் சுரேஷை போன் மூலம் அழைத்தார். தனது மனைவி திருந்திவிட்டதாகவும் அதனால் அவரை அழைத்து வந்து குடும்பம் நடத்தலாம் என்ற ஆசையில் சுரேஷ் அவரை பார்க்க சென்றார். அப்போது மறைந்திருந்த வினோத் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக சுரேஷை கத்தியால் குத்தினார்கள். இதனால் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சுரேஷ் வீடியோ ஒன்றை தனது குடும்பத்தாருக்கு அனுப்பி உள்ளார். அதில் தன்னை தாக்கியவர்கள் வினோத் மற்றும் சரண்யா தான் என்றும், தான் ஒருவேளை மரணமடைந்தால் தன்னுடைய மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

More News

கட்டி முடிக்கப்பட்டவுடன் அயோத்தி ராமர் கோவில் எப்படி இருக்கும்? வைரலாகும் புகைப்படங்கள்

பல ஆண்டுகளாக ராமர் கோயில் பிரச்சினை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் விடிவு காலம் ஏற்பட்டது

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்!

'மாநகரம்' மற்றும் 'கைதி' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக தளபதி விஜய் படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றார்

'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு நடனம் ஆடிய 'பிகில்' நடிகை: வைரலாகும் வீடியோ

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு

கொரோனாவால் இருந்து குணமான தம்பதி தற்கொலை: அதிர்ச்சி காரணம்

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உடல்நலத்தை பாதிப்பதோடு, பெரும்பாலானோர்களுக்கு மன உளைச்சளையும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம் 

பிக்பாஸ் தமிழ் நடிகை வெளியிட்ட ஹாட் வொர்க்-அவுட் வீடியோ

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தங்களது சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே