close
Choose your channels

ஒடும் ரயிலில் இருந்து கணவனை தள்ளிவிட்ட மனைவி: உடனிருந்த மூவர் கள்ளக்காதலர்களா?

Thursday, January 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருத்தணி அருகே கணவனை மனைவியே ரயில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டதாகவும் அவருக்கு 3 பேர் உதவி செய்ததாகவும் அவர்கள் கள்ளகாதலர்களா? அல்லது கூலிப்படையை சேர்ந்தவர்களா? என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை ஆவடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் அஸ்வினி என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணம் நடந்தது முதல் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்து கொண்டதாக தெரிகிறது

இந்த நிலையில் சமீபத்தில் ராஜேந்திரன் திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்வதற்காக மின்சார ரயிலில் ஏறி உள்ளார். அவர் சென்ற ரயில் அரக்கோணம் அருகே சென்றபோது திடீரென முகத்தை மூடி கர்சீப் கட்டியிருந்த ஒரு பெண்ணும் மூன்று பேரும் சேர்ந்து அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர். ரயிலில் இருந்து கீழே விழுந்த ராஜேந்திரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரயில்வே போலீசார் ராஜேந்திரனிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் தனக்கும் தன்னுடைய மனைவி அஸ்வினிக்கும் அடிக்கடி தகராறு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் தான் கூலிப்படைகளை வைத்து தன்னை கொலை செய்ய முயன்றதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்

முகத்தை மூடிக்கொண்டு அஸ்வினியுடன் இருந்த மூவர் அவருடைய கள்ளக்காதலர்கள் அல்லது கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கணவனை மனைவியே கூலிப்படையை வைத்து ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.