close
Choose your channels

கணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்த கூலிப்படையை ஏவிய மனைவி: அதிர்ச்சி தகவல் 

Friday, August 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாகர்கோவில் அருகே கணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்தி கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மனைவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணேஷ் என்பவருக்கும், காயத்ரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் காயத்ரிக்கு திருமணத்திற்கு முன்பே யாசீன் என்பவருடன் காதல் இருந்ததாகவும், திருமணத்திற்குப் பின்னரும் அவருடன் சுற்றிக் கொண்டு இருந்தகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் யாசீன் தனது காதலியை அருகில் வைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக காயத்ரி இருக்கும் பகுதியிலேயே ஒரு பிளே ஸ்கூல் ஒன்றை தொடங்கினார். இந்த பிளே ஸ்கூல் தொடங்குவதற்கும் காயத்ரியே தனது கணவனிடம் ரூ.10 லட்சம் வாங்கி கொடுத்துள்ளார். தனது அண்ணன் தொழில் செய்யப்போவதாக பொய் கூறி கணவரிடம் இந்த பணத்தை வாங்கி யாசீனிடம் கொடுத்ததாக தெரிகிறது

காயத்ரி வீட்டின் பக்கத்திலேயே பிளே ஸ்கூல் இருந்ததால் காயத்ரியும் யாசீனும் அடிக்கடி காதல் லீலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் 10 லட்ச ரூபாயை அண்ணனிடம் இருந்து திருப்பி வாங்கி வா என்று காயத்ரியிடம் கணேஷ் கூறியபோது தனது கள்ளக்காதல் வெளியே தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்ய காயத்ரி திட்டமிட்டார்

இதனையடுத்து யாசினிடம் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவி தனது கணவரை கொலை செய்யுமாறு காயத்ரி கூறினார். சம்பவத்தன்று வீட்டின் பின் கதவை பூட்டாமல் காயத்ரி வைத்திருந்ததால், அதன் வழியாக யாசின் மற்றும் கூலிப்படையினர் உள்ளே வந்து கணேஷின் தலையில் கத்தியால் வெட்டினார்கள். அது மட்டுமன்றி கணேஷின் ஆணுறுப்பையும் சிதைத்து சென்றதாக தெரிகிறது. கணேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அந்தப் பெண்தான் கூலிப்படையை ஏவி கணேஷின் ஆணுறுப்பை சேதம் செய்ததாக போலீஸ் விசாரணையில் கூற காயத்ரி திட்டமிட்டிருந்தார்.

ஆனால் போலீசாரின் சந்தேகப்பார்வை காயத்ரி மீது இருந்ததால் அவரிடம் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை செய்ததில் காயத்ரி வேறு வழியின்றி உண்மையை கூறிவிட்டார். காயத்ரிக்கு உறுதுணையாய் இருந்த விஜயகுமார் கருணாகரன் ஆகிய இரண்டு கூலிப்படை நபர்களையும் காயத்ரியையும் போலீஸார் கைது செய்ததோடு, தலைமறைவாக உள்ள யாசினை தேடி வருகின்றனர். தற்போது கணேஷ் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.