close
Choose your channels

முதல் லாட்டரியிலேயே 35 கோடி ரூபாய் பரிசு… மகிழ்ச்சியில் இளம்பெண்!

Monday, February 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இங்கிலாந்து நாட்டில் கணவர் ஒருவர் பல வருடங்களாக லாட்டரி வாங்கும் பழக்கத்தை கொண்டிருந்தும் அவரால் ஒருமுறை கூட பரிசு வெல்ல முடியவில்லை. இதைப் பார்த்து திடீரென்று ஒரு டிக்கெட் வாங்கிய மனைவிக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியிருக்கிறது.

இங்கிலாந்தில் வசித்துவரும் தம்பதிகள் பென் ஒமேகா- பெக்கா பாட். இதில் பென் கடந்த பல வருடங்களாக ஒமேஸ் எனப்படும் மில்லியன் டாலர் பங்களாக லாட்டரியை வாங்கி வந்துள்ளார். ஆனால் ஒருமுறைகூட அவரால் பரிசு வெல்லமுடியல்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயான மனைவி பெக்கா வீட்டில் இருந்தபோது தனது கணவருக்கு உதவும் வகையில் ஒரு ஒமேஸின் லாட்டரி டிக்கெட்டை 1,000 ரூபாய் கொடுத்து ஆன்லைனில் வாங்கியுள்ளார்.

இதைத் தனது கணவரிடம் கூறாமல் இருந்த 32 வயது பெக்காவிற்கு தற்போது அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. காரணம் பெக்கா வாங்கிய லாட்டரி சீட்டிற்கு 35 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா பரிசாகக் கிடைத்திருக்கிறது. இதையடுத்து 2 அறை கொண்ட சாதாரண வீட்டிலிருந்த இந்தத் தம்பதிகள் தற்போது பங்களா வீட்டிற்கு மாறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து பல வருடங்களாக லாட்டரி வாங்கியும் பரிசு வெல்லாத பென், ஒரே டிக்கெட்டில் பங்களாவை வென்ற தன் மனைவி பெக்காவை பாராட்டி தள்ளிவருகிறார். மேலும் இதுதனது பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனத் தம்பதிகள் மகிழ்ச்சியில் தத்தளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.