வேண்டுமென்றே உடலுறவை தவிர்த்த மனைவி? அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

  • IndiaGlitz, [Monday,July 03 2023]

திருமண வாழ்வில் வேண்டுமென்றே உடலுறவை தவிர்ப்பது மனக்கொடுமைக்கு சமம் என்று கூறி டெல்லி குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டு இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

ஆன்லைன் மேட்ரிமோனியல் பக்கத்தில் துணையைத் தேடிய பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் 13 மாதங்கள் பழகிய பின்பு கடந்த 2014 இல் அவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் திருமணம் ஆனதில் இருந்தே தனது கணவருடன் உடலுறவு கொள்வதை அந்தப் பெண் தவிர்த்து வந்ததால் ஒருகட்டத்தில் அவருடைய கணவர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் என் மனைவி என்னுடன் உடலுறவு கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார் என்று கூறிய அந்தக் கணவர் எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்றிருக்கிறது. இந்த வழக்கை நீதிபதி விபின் குமார் ராய் விசாரித்துள்ளார்.

அந்த விசாரணையின்போது இருதரப்பினரும் பல்வேறு வாதங்களை வைத்துள்ளனர். அதிலும் பெண்ணின் தகப்பானார் என் மகளுக்கு உடலுறவின் மீது பயம் கொள்ள செய்யும் ஜீனோபோபியா என்ற நோய் இருக்கிறது என்று வாதாடியதோடு விவாகரத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விபின் குமார் ராய் இயல்பான ஆரோக்கியமான பாலியல் உறவு என்பது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் அடிப்படை அங்கம். வேண்டுமென்றே தனது இணையுடன் பாலியல் உறவைத் தவிர்ப்பது என்பது மற்றொரு நபரை மன ரீதியாக கொடுமைக்கு ஆளாக்கும் செயல். குறிப்பாக இருவரும் இளம் ஜோடியாக இருக்கிறார்கள் என்று கூறி விவகாரத்து வழங்கி உத்தரவிட்டு இருப்பது தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

இந்த வழக்கில் மேலும் பேசிய நீதிபதி விபின் குமார் ராய் ஒருவரை தானே சுயமாகத் தேர்வு செய்து திருமணம் செய்துகொண்ட பிறகு அவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த திமுக அமைச்சர்: என்ன காரணம்..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திமுக அமைச்சர் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

'தளபதி 68' படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா விஜய்? அதிர்ச்சி தகவல்..!

https://www.indiaglitz.com/thalapathy-vijay-political-entry-taking-break-from-acting-after-thalapathy-68-leo-vmi-tamil-news-339245

திமுகவில் இன்று வரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாடு: 'மாமன்னன்' படம் குறித்து பா ரஞ்சித்..!

சமீபத்தில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படம் குறித்து தனது கருத்தை இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது குறித்து

காதலை மறைக்க வேண்டிய சூழல் இன்று இல்லை… கருத்து கூறிய மிருணாள் தாகூரின் ஸ்டேட்டஸ் என்ன?

சீதாராமம் திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமாகி இருக்கும் நடிகை மிருணாள் தாகூர், இன்று சினிமாவில் நடிகர், நடிகைகள் தங்களது உறவுநிலையைப் பற்றி வெளிப்படையாக பேசும்

டிவிட்டர் பதிவை பார்க்கவே கட்டுப்பாடு? திடுக்கிடும் அறிவிப்பு வெளியிட்ட எலான் மஸ்க்!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்தே அதில் பல்வேறு புது மாற்றங்களைப் புகுத்தி வருகிறார்.