தேவைப்பட்டால் அரசியலுக்கு வரத்தயார். ராகவா லாரன்ஸ்

  • IndiaGlitz, [Wednesday,February 01 2017]

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பம் முதல் கடைசி வரை பெரும் ஆதரவு கொடுத்தவர்களில் முக்கியமானவர் நடிகர் லாரன்ஸ். போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள் ஆகியவற்றை தனது செலவில் கொடுத்து போராட்டம் வெற்றிகரமாக முடிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர். அதே நேரத்தில் போராட்டம் வன்முறையாக மாறியபோது மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியவரும் கூட.

மேலும் சமீபத்தில் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய கோரியும், போராட்டத்தின் வெற்றியை கொண்டாட அனுமதியும் கோரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டதை அடுத்து சற்றுமுன் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாணவர்களின் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாகவும், தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வரத்தயார் என்றும் கூறியுள்ளார். மேலும் தான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமே தேர்தலில் நிற்பார்கள் என்றும் அவர் கூறினார். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான வெற்றி விழாவை விரைவில் கொண்டாடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

More News

மெரீனா வன்முறைக்கு விசாரணை கமிஷன். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமனம் செய்த முதல்வர்

சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தின் கடைசி தினத்தில் நடந்த வன்முறையால் மாணவர்கள், பொதுமக்கள் குறிப்பாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்...

நேற்று பாராளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்பி இன்று மரணம்

நேற்று பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்தபோது கேரள எம்பி அகமது என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் நாடாளுமன்றம் அருகிலுள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...

அரவிந்தசாமியுடன் முதல்முறையாக இணையும் நந்திதா

'தனி ஒருவன்' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி ஆன அரவிந்தசாமி, ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்து நடித்த 'போகன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ...

ஜனவரியில் மிஸ் ஆன தல-தளபதி சந்திப்பு பிப்ரவரியில் நடக்குமா?

கடந்த மாதம் ஜல்லிக்கட்டுக்காக கோலிவுட் திரையுலகினர் நடத்திய மெளன உண்ணாவிரத போராட்டத்தின்போது அஜித், விஜய் சந்திப்பு நடக்கும் என்று எதிர்பர்க்கப்பட்டது. ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டாலும், விஜய் கலந்து கொள்ளாததால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை...

ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு,. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் காரணமாக தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில் கடந்த வாரம் அவசர சட்டம் இயற்றியது. இந்த அவசர சட்டம் சட்ட முன்வடிவாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதோடு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்...