தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு-நயன்தாரா?

  • IndiaGlitz, [Thursday,December 31 2020]

சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டில் சிம்பு நடித்து இயக்கிய ’வல்லவன்’ திரைப்படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து 2016ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய ’இது நம்ம ஆளு’ என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.

இந்த நிலையில் ‘கற்றது தமிழ்’, ’தங்க மீன்கள்’, உள்பட ஒருசில படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு, நயன் தாரா மூன்றாவது முறையாக இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

நூதன முறையில் நூற்றுக்கணக்கான பெண்களை மிரட்டிய ஆசாமி… ஒரு புகாரால் முடிவுக்கு வந்த சர்ச்சை!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாத நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

2020 இல் நான் கற்றுக் கொணடவை… மனம் திறக்கும் முன்னணி நடிகை!!!

தமிழின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலாபால். இவர் முன்னதாக இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார்.

மாஸ்டருக்கும் ஈஸ்வரனுக்கும் வரவேற்பு கொடுங்க மக்களே: பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்பட்டும் போதிய பார்வையாளர்கள் வரவில்லை

ஆரியிடம் மனைவி கூறியது என்ன?

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன் வெளியான வீடியோவில் ஆரியின் மனைவி மற்றும் குழந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.

தப்பா டைட்டில் போட்டு என் சோகத்துல காசு பாக்காதீங்க: அனிதா வேண்டுகோள்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அனிதாவின் தந்தையார் சம்பத் அவர்கள் சமீபத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் இந்த துயரத்தில் இருந்து மீள முடியாத அனிதா,