close
Choose your channels

ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளுக்கு தடையா? ரிசர்வ் வங்கி விளக்கம்!

Monday, January 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில தினங்களுக்கு முன்பு பழைய 100 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்ற தகவல் ஊடகங்களில் வெளியானது. மேலும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு இந்த முடிவு எடுக்கப் பட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன. இதனால் முன்பு ரூ.500, 1000 நோட்டுகளைப் போலவே பழைய ரூ.100 நோட்டுகளைக் கொடுத்து விட்டு புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் இந்தத் தகவல் உண்மையானதா என்பது குறித்த சந்தேகம் தற்போது எழுந்து உள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் துணைப் பொதுச்செயலாளர் பி.மகேஷ் தெரிவித்தாக உலா வரும் இந்தத் தகவல் பொய்யானது என ரிசர்வ் வங்கி டிவிட்டரில் விளக்கம் அளித்து உள்ளது.

மேலும் இதுதொடர்பாக ரிசர் வங்கி வெளியிட்டு உள்ள அந்த டிவிட்டர் பதிவில் “விரைவில் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட உள்ளதாகப் பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அவ்வாறு வெளியாகும் செய்திகள் தவறானது” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.