close
Choose your channels

நடராஜன் மறைவு எதிரொலி: பரோலில் வருகிறார் சசிகலா?

Tuesday, March 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடராஜன் மறைவு எதிரொலி: பரோலில் வருகிறார் சசிகலா?

சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை சென்னை மருத்துவமனையில் காலமானதை அடுத்து பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலா பரோலில் வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சசிகலாவின் கணவர் நடராஜன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சசிகலாவுக்கு பரோல் விண்ணப்பம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் பெங்களூரு சிறை அதிகாரிகள் அவருக்கு பரோல் தர மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சசிகலாவின் கணவர் மரணம் அடைந்ததை அடுத்து அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடராஜனின் இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டவுடன் பெங்களூரு சிறை நிர்வாகம் சசிகலாவுக்கு பரோல் வழங்கும் என சிறை வட்டாரங்கள் கூறுகின்றன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.