முதல்வர் பதவியை நோக்கி சசிகலா.. விட்டு கொடுக்கின்றாரா ஓபிஎஸ்?

  • IndiaGlitz, [Saturday,February 04 2017]

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்று சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வர்தா புயல், ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவற்றில் முதல்வர் எடுத்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் மத்திய அரசின் முழு ஆதரவும் முதல்வருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சசிகலா வரும் 9ஆம் தேதி முதல்வர் பதவியை ஏற்க உள்ளதாகவும், இதனை பன்னீர்செல்வமே முன்மொழிவார் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதை உறுதி செய்ய நாளை பிற்பகல் 1.30 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் சசிகலா கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் சசிகலாவுக்கு ஆதரவை அதிகரிக்க அவர் முதல்வர் பதவியை ஏற்றவுடன் முதல் கையெழுத்தாக மதுவிலக்கு திட்டத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது.

More News

ரூ.100 நோட்டுக்கும் ஆபத்தா? ரிசர்வ் வங்கி விளக்கம்

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபுதேவாவுடன் மீண்டும் இணையும் ஆர்ஜே பாலாஜி

இயக்குனர் விஜய் இயக்கிய 'தேவி' படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்த நடித்த ஆர்ஜே பாலாஜி, மீண்டும் ஒரு படத்தில் அவருடன் இணைகிறார். அந்த படம் தான் 'யங் மங் சங்'...

கமல் பட டைட்டில் வைத்த சிபிராஜூக்கு கமல் பாராட்டு

சத்யராஜ் மகனும் நடிகருமான சிபிராஜ் தற்போது 'சைத்தான்' இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளியாகியுள்ளது...

நான் முதலில் மனிதன். அப்புறம்தான் 'இந்தியன்'. கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக சமூக கருத்துக்களை அதிகம் தனது சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவர் தெரிவித்த நியாயமான கருத்துக்கள், காவல்துறையின் வன்முறைக்கு அவர் தெரிவித்த கண்டனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

இது கே.வி.ஆனந்தின் மற்றொரு 'கோ'வம். கபிலன் வைரமுத்து

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்'; திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது