close
Choose your channels

தமிழகத்தில் மழை நீடிக்குமா? வானிலை அறிக்கை!

Thursday, November 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்தக் காற்றழுத்தப் பகுதி காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இதனால் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட கரையோர பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் வீசும்.

அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பொழியும்.

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககனமழையும் தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 54% அதிகம் பொழிந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 77% அதிகமாக பெழிந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தாம்பரத்தில் 23செ.மீட்டரும், சோழவரத்தில் 22 செ.மீட்டரும பதிவாகியுள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற தற்போதைய நிலையில் வாய்ப்பு இல்லை என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.