யாஷிகாவுக்கு திருமணமாகிவிட்டதா? புகைப்படம் ஏற்படுத்திய பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,August 03 2020]

நடிகை யாஷிகா தொழிலதிபர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவாகி வரும் நிலையில் சமீபத்தில் அவர் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோஷூட்டில் நெற்றி வகிடில் பொட்டு வைத்து இருந்ததால் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்

நடிகை யாஷிகா இந்த கொரோனா விடுமுறை நேரத்தில் தனது விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்தது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ந்த வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அவர் சேலையில் ஹோம்லி லுக்கில் எடுத்த போட்டோ ஷூட்டின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்

அதில் அவர் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து இருந்ததால் யாஷிகாவுக்கு திருமணம் ஆகி விட்டதா என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். பொதுவாக திருமணம் ஆன பெண்கள் மட்டுமே நெற்றி வகிட்டில் பொட்டு வைப்பார்கள் என்பதால் இந்த கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது

ஆனால் இது குறித்து விளக்கம் அளித்த யாஷிகா, ‘இது போட்டோஷூட்டுக்காக வைக்கப்பட்ட பொட்டு என்றும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். சேலையுடன் ஹோம்லி லுக்கில் யாஷிகா அழகாக இருப்பதாக சிலரும் இந்த உடை உங்களுக்கு செட் ஆகவில்லை என்று சிலரும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

தமிழகத்தின் அண்டை மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று: பரபரப்பு தகவல்

நேற்று ஒரே நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகிய பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வீடியோவை பார்த்து கண்கலங்கிய சோனுசூட்: ரியல் ஹீரோவின் உணர்ச்சிபூர்வமான காட்சி!

திரையில் வில்லன் நடிகராக இருந்தாலும் இந்த கொரனோ காலத்தில் ஏராளமான பொது மக்களுக்கு உதவி செய்ததன் மூலம் ரியல் ஹீரோவாக மாறியுள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட் என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம்

ரஜினி குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குனர்

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்னரே வெளியான திரைப்படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'.

அமித்ஷா குணமாக குஷ்பு டுவீட்: பரபரப்பு தகவல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மத்திய உள்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸால் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட பல விஐபிக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால்