close
Choose your channels

ஷேர்வார்னே மரணம்: பூங்கொத்துடன் ஆம்புலன்ஸில் நுழைந்த பெண்மணி யார்?

Monday, March 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேர் வார்னேவு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்முன், ஆம்புலன்சில் பூங்கொத்துடன் நுழைந்த பெண்மணி யார் என்ற கேள்வி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தாய்லாந்து சென்று இருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஷேர்வார்னே உடல் ஆம்புலன்சில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்படும் நேரத்தில் திடீரென ஒரு பெண் ஆம்புலன்ஸ் உள்ளே சென்றதாக தெரிகிறது. அவர் ஆம்புலன்ஸில் உள்ள ஷான் வார்னே உடலுக்கு பூங்கொத்துக்களை வைத்து தனது கடைசி மரியாதையைத் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தாய்லாந்து போலீசார் விசாரணை செய்ததில் அந்த பெண்மணி ஜெர்மன்யை சேர்ந்தவர் என்றும், ஷேர்வார்னேவின் நெருங்கிய நண்பர் மற்றும் தீவிர ரசிகை என்றும் தாய்லாந்து அரசு அதிகாரிகளுக்கும் அவர் பரிட்சயமானவர் என்றும், அதனால்தான் அவர் பூங்கொத்துடன் ஆம்புலன்ஸ் உள்ளே இறுதி மரியாதை செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் தாய்லாந்து போலீஸார் விளக்கமளித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.