close
Choose your channels

குடியிருப்பு வளாகத்தில் ஆடையின்றி சுற்றிய இளம்பெண்.. அதிர்ச்சியில் அக்கம்பக்கத்தார்..!

Thursday, February 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மும்பையில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் ஆடையின்றி இளம் பெண் ஒருவர் இரவில் சுற்றித்திரிந்த விவகாரம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

மும்பையில் உள்ள சான்டாகுரூஸ் என்ற பகுதியில் அமைந்த குடியிருப்பு வளாகத்தில் குடியிருக்கும் ஒருவர், பெண் விருந்தினர் ஒருவரை அழைத்து வந்ததாகவும் அந்த பெண் விருந்தினர் ஆடை இன்றி கட்டிடத்தின் பல பகுதிகளில் சுற்றி திரிந்ததாகவும் ஆபாச செயல்களை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சிசிடிவி காட்சியின் மூலம் அறிந்த அந்த அப்பார்ட்மெண்ட் உறுப்பினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாக தெரிகிறது. அந்த புகாரில் இரவு 11 மணிக்கு மேல் விருந்தினராக வந்த வந்த பெண் ஒருவர் ஆடையின்றி அலைந்து கொண்டிருந்ததாகவும் காலை வரை அவர் அநாகரீக செயல்களை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த வீட்டில் குடியிருப்பவர் இதே போல் பல பெண் நண்பர்களை அழைத்து வருவதாகவும் இது குறித்து அவருக்கு அறிவுறுத்திய போதிலும் அவர் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் குடும்பத்துடன் வேறொரு வீட்டில் வசித்து வரும் நிலையில் அவ்வப்போது பிற பெண்களை இந்த அடுக்குமாடி குடியிருப்பு அழைப்பு வருவதாகவும் அவ்வாறு வரும் பெண்களில் சிலர் அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும் புகாரில் கூறியுள்ளனர்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் செக்சன் 294, செக்சன் 114 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.