close
Choose your channels

கோமாளி படத்தையே மிஞ்சிய சம்பவம்… சாதாரண சளியால் 20 வருட நினைவுகளை இழந்த சோகம்!

Wednesday, February 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இங்கிலாந்து நாட்டில் பத்திரிக்கையாளராக பணியாற்றிவந்த பெண் ஒருவருக்கு சளி பிடித்து அதனால் தனது 20 வருட அனுபவங்களையும் நினைவுகளையும் இழந்திருக்கும் சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

43 வயதான கிளாரிக் என்பவர் கடந்த 2021 இல் தன்னுடைய மகனிடம் இருந்து தனக்கு சளி பிடித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இரவு தூங்கச்சென்ற அவர் மறுநாள் காலையில் எழாமல் இருந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கிளாரிக்கு மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

என்செபாலிடிஸ் எனப்படும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட கிளாரிக் கிட்டத்தட்ட 16 நாட்கள் கோமாவில் இருந்துள்ளார். மேலும் இதனால் தன்னுடைய 20 வருட நினைவுகளை இழந்திருக்கிறார். இதில் இருக்கும் மற்றொரு சோகம் என்னவென்றால் கிளாரி தனக்கு திருமணம் நடந்தது, குழந்தை பிறந்தது, ஒரு மகன் இருப்பது, தான் ஒரு பத்திரிக்கையாளராக வேலைப்பார்ப்பது என எல்லாவற்றையும் மறந்திருக்கிறார்.

ஆனாலும் இழந்துபோன நினைவுகள் எல்லாம் மீண்டும் கிடைத்துவிடும் என்ற உத்வேகத்துடன் அவர் இருந்துவருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.