பாகிஸ்தான் ஜிந்தாபாத் - CAA க்கு எதிரான பேரணியில் முழக்கம் எழுப்பிய இளம் பெண் கைது

  • IndiaGlitz, [Friday,February 21 2020]

நாடு முழுவதும் இந்தியக் குடியுரிமைச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) க்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெங்களுரில்  CAA க்கு எதிராக ‘சேவ் கான்டிட்யூஷன்’ என்ற அமைப்பின் சார்பாகப் பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது . இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் ஹைத்ராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்த பேரணி துவக்கத்திற்கான மேடையில் அமுல்யா லியோனா எனும் இளம் பெண் உரையாற்றினார். உரையாற்றிக் கெண்டிருக்கும் போதே திடீரென “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று முழக்கமிடத் தொடங்கினார். இவரது செயலைக் கண்ட ஓவைசி மற்றும் அங்குள்ள மற்றவர்கள் அவரைத் தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அமுல்யா தனது முழக்கத்தை விடவேயில்லை. எனவே அவரை காவல் துறையினர் மேடையிலே வைத்து கைது செய்திருக்கின்றனர்.

அமுல்யாவின் கைதுக்குப் பின் உரையாடிய ஓவைசி முழக்கம் எழுப்பிய பெண்ணிற்கும் எங்களது கட்சிக்கும், தற்போதைய போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. “நாங்கள் இந்தியாவை ஆதரிப்பவர்கள். எதிரி நாடான பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை. நமது நோக்கம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது” என மேடையிலேயே விளக்கம் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

முழக்கம் எழுப்பிய அமுல்யா மீது பெங்களூர் காவல் துறை தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. விசாரித்த நீதிபதி அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். எனவே அமுல்யா தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் ஒரு இளம்பெண் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

More News

ஸ்ரீரெட்டி கைது செய்யப்படுவாரா? தெலுங்கு திரையுலகில் பரபரப்பு

தெலுங்கு திரை உலகின் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் பலர் மீது பாலியல் புகார் கொடுத்து

எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்: அனுஷ்கா வேதனை

ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை அனுஷ்கா  ஷெட்டி. பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' ஆகிய படங்களில் நடித்த பின்னர் அவர் உலகப் புகழ் பெற்றார்

'அட்டக்கத்தி' தினேஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

அட்டக்கத்தி தினேஷ் நடித்த 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் தற்போது 'வாராயோ வெண்ணிலவே',

மதுரையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி – ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. முதல் முறையாக மதுரை

'இந்தியன் 2' விபத்து: ஃபெப்சி நிறைவேற்றிய அதிரடி தீர்மானங்கள்

கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மதுசூதனன் ஆகிய மூன்று பேர் பரிதாபமாக பலியாகியுள்ள நிலையில்