close
Choose your channels

ஒரே ஒரு வார்த்தை: பலாத்காரம் செய்ய வந்த வாலிபரை தலைதெறிக்க ஓடவிட்ட பெண்!

Monday, April 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலியல் பலாத்காரம் செய்ய வந்த வாலிபர் ஒருவரை ஒரே ஒரு வார்த்தை கூறி தலை தெறிக்க ஓட வைத்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்கபாத் என்ற பகுதியை சேர்ந்த 29 வயது விதவைப்பெண் ஒருவர் தனது 7 வயது மகளுடன் சாலையில் நடந்து கொண்டு சென்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை அவர்கள் இருவரையும் வீட்டில் டிராப் செய்வதாக கூறி தனது பைக்கில் ஏற்றியுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்லாமல் ஒதுக்குபுறமாக உள்ள ஒரு இடத்திற்கு சென்ற அந்த வாலிபர் கத்தியை காட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென சமயோசிதமாக செயல்பட்ட அந்த பெண் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் தலைதெறிக்க ஓடிவிட்டார்.

இந்த நிலையில் இதுகுறித்து அந்த பெண் செய்த புகாரின் அடிப்படையில் வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் அந்த நபர் பெயர் கிஷோர் என்பதும், ஏற்கனவே தனது தந்தையையே கொலை செய்துவிட்டு ஜாமீனில் இருந்து வருபவர் என்பதும் தெரிய வந்தது.

பாலியல் பலாத்காரம் செய்ய வந்த வாலிபரை சமயோசிதமாக செயல்பட்டு பலாத்காரத்தில் இருந்து தப்பியதோடு, குற்றவாளியை போலீசுக்கும் அடையாளம் காட்டிய அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.