close
Choose your channels

இன்னொரு பெண்ணுடன் தொடர்பு: மும்பை நடுரோட்டில் கணவனை விரட்டி விரட்டி அடித்த பெண்

Monday, July 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் நட்பு இருப்பதை தெரிந்து கொண்ட பெண் ஒருவர் நடுரோட்டில் கணவனை விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் எப்போதும் டிராபிக் அதிகம் உள்ள ஃபெடர் ரோடு என்ற பகுதியில் ஒரு ஆண் ஒரு இளம்பெண்ணுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த அந்த நபரின் மனைவி தன்னுடைய கணவருடன் இன்னொரு பெண் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இன்னொரு கார் மூலம் அந்த காரை விரட்டிச் சென்றார்.

இந்த நிலையில் அந்த காரை பிடித்து அவர் கணவரை வெளியே வருமாறு திட்டினார். இதனை அடுத்து அந்த நபர் வெளியே வந்தவுடன் அவரை நடுரோட்டில் போட்டு அடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காரின் உள்ளே இருந்த இளம்பெண் அந்த காரை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றார். ஆனால் அந்த பெண் அந்த காரின் பின்னாடியே ஓடி சென்றார். துரதிஷ்டவசமாக அந்த கார் சிக்னல் ஒன்றில் சிக்கியபோது, காரில் இருந்த பெண்ணை வெளியே வருமாறு கூறி காரின் பேனட் உட்கார்ந்து கொண்டு கண்ணாடியை செருப்பால் அந்த பெண் அடித்துள்ளார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். இருப்பினும் எந்த கிரிமினல் நடவடிக்கையும் அந்தப் பெண் மீது போலீசார் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.