close
Choose your channels

டிக்டாக்கில் விஷம் குடித்த வீடியோவை வெளியிட்டு பெண் தற்கொலை!

Wednesday, June 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக்டாக் செயலியில் விஷம் குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்ட அரியலூர் பகுதியை சேர்ந்த 24 வயது பெண் பரிதாபமாக பலியானார்.

அரியலூர் பகுதியை சேர்ந்த அனிதா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழனிவேலு என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வேலை நிமித்தமாக பழனிவேலு சிங்கப்பூருக்கு சென்றதால் அனிதா இரண்டு குழந்தைகளையும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில்தான் அவருக்கு டிக்டாக் மோகம் பிடித்தது. குழந்தைகளை கூட கவனிக்காமல் எந்த நேரமும் டிக்டாக்கில் அவர் விதவிதமான வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளுவதிலேயே குறியாக இருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து அவரது கணவரிடம் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். இதனையடுத்து மனைவி அனிதாவை பழனிவேலு போனில் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அனிதா, டிக்டாக் செயலியில் விஷம் குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார். பொழுதுபோக்கிற்காக பயன்படுத்திய டிக்டாக் கடைசியில் ஒரு உயிரையே பலிவாங்கிவிட்டது. தற்போது தந்தை வெளிநாட்டிலும் தாயார் பிணமாகவும் இருக்க இரண்டு குழந்தைகள் ஆதரவற்று உள்ளது அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos