close
Choose your channels

போலீசார் தாக்கியதால் அவர்கள் முன்னிலையிலேயே தீக்குளித்து பெண் தற்கொலை…பதற வைக்கும் சம்பவம்!!!

Friday, November 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போலீசார் தாக்கியதால் அவர்கள் முன்னிலையிலேயே தீக்குளித்து பெண் தற்கொலை…பதற வைக்கும் சம்பவம்!!!

 

நெல்லை மாவட்டத்தில் தன்னைத் தாக்கிய போலீசார் முன்னிலையிலேயே 45 வயதான பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டத்தின் சுத்தமல்லி எனும் பகுதியில் சகுந்தலா(45) எனும் பெண்மணி தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட இவரை போலீசார் தாக்கியதால் விரக்தியில் தற்கொலை செய்து கெண்டார் என்றும் கூறப்படுகிறது.

திருட்டு வழக்கு ஒன்றில் சகுந்தலாவின் 2 ஆவது மகன் பிரதீப் (20) என்பவருக்குத் தொடர்பு இருப்பதாகப் போலீஸ் தரப்பு தெரிவித்து இருக்கிறது. இதை பிரதீப்பும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் திருட்டுப் பொருளை மீட்பதற்காக நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு போலீசார் சகுந்தலாவின் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திருட்டுப் பொளை எடுத்துக் கொண்ட போலீசார் பிரதீப்பை விசாரணைக்கு அழைத்துக் கொண்டதோடு சகுந்தலாவின் மூத்த மகன் பிரசாந்த் (22) ஐயும் கூடவே அழைத்துச் செல்ல முற்பட்டு இருக்கின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த சகுந்தலா திருட்டு வழக்கில் சம்பந்தமுடைய பிரதீப்பை அழைத்துச் செல்கிறீர்கள். மூத்தவன் எதற்கு எனக் கேள்வி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். இச்சம்பவத்தின்போது அக்கம் பக்கத்து வீட்டாரும் சகுந்தலாவின் வீட்டிற்கு முன் குவிந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சகுந்தலாவின் கேள்விகளால் எரிச்சல் அடைந்த போலீசார் அவரை லத்தியதால் தாக்கிதாகக் கூறப்படுகிறது. இதைச் சற்றும் எதிர்பாராத சகுந்தலா அதே இடத்திலேயே மண்ணெய் ஊற்றித் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.

இதைப் பார்த்து அதிர்ந்து போன போலீசார் சகுந்தலாவை காப்பாற்ற முயற்சித்து இருக்கின்றனர். மேலும் தீயிட்டு கொளுத்திக் கொண்ட அவரை போலீஸ் வாகனத்திலேயே மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்று இருக்கின்றனர். ஆனால் வழியிலேயே சகுந்தலாவின் உயிர் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் தாக்கியதால் விரக்தியில் தீயிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.