close
Choose your channels

மாமனார் வாங்கி வந்த மாவில் போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் உயிரிழப்பு!

Tuesday, April 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாமனார் வாங்கி வந்த போண்டா மாவில் போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் உயிரிழந்ததால் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரிடம் அவரது மகள் பாரதி போண்டா செய்வதற்காக மாவு வாங்கி வரச் சொன்னார். அவர் போண்டா மாவுடன் தனது தோட்டத்தில் உள்ள செடியில் அடிப்பதற்காக பூச்சிக்கொல்லி மாவும் வாங்கியுள்ளார்

இது தெரியாத அவரது மருமகள் பாரதி இரண்டுமே போண்டா மாவு என நினைத்து இரண்டையும் கலந்து போண்டா செய்துள்ளார். அந்த போண்டாவை பாரதியின் கணவர், மாமனார், மாமியார் என அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட்டனர். போண்டா சாப்பிட்ட சில நிமிடங்களில் திடீரென குடும்பத்தில் உள்ள அனைவரும் வாந்தி எடுத்ததை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மருமகள் பாரதி மட்டும் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.