close
Choose your channels

மருமகள் தொலைந்து போன மகளா? மகனின் நிலைமை என்ன? திருமணம் நடந்ததா?

Wednesday, April 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீனாவில் பெண் ஒருவரின் மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருந்த நிலையில் தனது வருங்கால மருமகள் 20 வருடங்களுக்கு முன் தொலைந்துபோன மகள் என்பதை அவர் கண்டுபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

சீனாவை சேர்ந்த ஜியாங்சு என்ற மாகாணத்தில் சமீபத்தில் திருமணம் ஒன்று நடக்க ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருந்தது. மணமகன் மணமகள் ஆகியோர்கள் திருமணத்துக்கு தயாராகிவிட்ட நிலையில் மணமகனின் தாயார் தற்செயலாக வருங்கால மருமகள் கையிலுள்ள அடையாளம் ஒன்றை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்

20 வருடங்களுக்கு முன் தன்னுடைய தொலைந்து போன மகள் கையிலும் இதேபோன்று அடையாளம் இருந்ததை அடுத்து அவர் மணமகளின் பெற்றோரிடம் இதுகுறித்து கேட்டார். தங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அவருக்கு எப்படி தெரிந்தது என்று மணமகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து இந்தப் பெண்ணை தாங்கள் தத்து எடுத்து வளர்த்து வருவதாகவும் 20 வருடங்களுக்கு முன் சாலை ஒன்றில் கண்டதாகவும் கூறினார்கள். இதனையடுத்து தனக்கு மருமகளாக வரவிருப்பவர் தனது மகள் தான் என்பதை உறுதி செய்து கொண்ட உறுதி செய்து கொண்ட அந்தப் பெண் தனது மகளை கட்டியணைத்து பாச மழை பொழிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் மணமகன் மணமகள் ஆகிய இருவரும் அண்ணன் தங்கை உறவு முறை என்பதால் இருவருக்கும் திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் ஏற்பட்டது. ஆனால் அங்கே தான் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டது. இருபது வருடங்களுக்கு முன் மகள் தொலைந்ததை அடுத்து தான் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்ததாகவும் அந்த குழந்தை தான் தற்போதைய மணமகன் என்றும் எனவே இருவரும் அண்ணன் தங்கை இல்லை என்றும், அதனால் திட்டமிட்டபடி இந்த திருமணம் நடக்கலாம் என்றும் அந்த பெண் கூறியதை எடுத்து இருவருக்கும் சிறப்பாக திருமணம் நடந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.