close
Choose your channels

காதலியை கொலை செய்து சூட்கேஸில் வைத்து வீசிய காதலன்

Monday, April 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய காதலன் குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் இஞ்சினியராக பணிபுரியும் லாவண்யா என்ற பெண் சுனில் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் கல்லூரியில் இருந்தே ஒன்றாக பழகியவர்கள் என்பதால் பெண் வீட்டிலும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி தனக்கும் லாவண்யாவுக்கும் மஸ்கட்டில் வேலை கிடைத்திருப்பதாகவும் இருவரும் மஸ்கட் செல்ல வேண்டும் என்றும் லாவண்யா பெற்றோரிடம் சுனில் அனுமதி கேட்டுள்ளார். லாவண்யாவின் பெற்றோர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்து இருவரையும் விமான நிலையம் வரை வந்து வழியனுப்பி உள்ளனர். 

விமான நிலையத்தில் இருந்து லாவண்யாவின் பெற்றோர் சென்றவுடன் விமானத்தில் செல்லாமல் லாவண்யாவை ஒரு லாட்ஜுக்கு சுனில் அழைத்து சென்றார். அங்கு லாவண்யாவை கொலை செய்த சுனில், பின்னர் அவரது உடலை ஒரு சூட்கேஸில் வைத்து அதனை கால்வாயில் வீசியுள்ளார்.

மஸ்கட் சென்ற லாவண்யாவிடம் இருந்து எந்தவித தகவலும் இல்லாமல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை செய்தபோது இருவரும் மஸ்கட் செல்லவில்லை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து சுனிலை பிடித்து விசாரணை செய்தபோது லாவண்யாவை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லாவண்யா வற்புறுத்தியதால் அவரை கொலை செய்ததாகவும் அவர் விசாரணையில் கூறியுள்ளார். சுனில் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.