close
Choose your channels

5 மாதக் குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து, தாயை கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூரம்!!!

Wednesday, August 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

5 மாதக் குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து, தாயை கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூரம்!!!

 

பீகார் மாநிலத்தின் முசாப்பூர் பகுதியில் 5 மாதக் குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி தாயை கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முசாப்பூர் மாவட்டத்தின் கர்ஜா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் தனியாக வசித்து வந்திருக்கிறார். அவரது கணவர் பாட்னாவிற்கு வேலைக்காக சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனியாக வசித்து வந்த திருமணமான பெண்ணை அவளது 5 மாதக் குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி கூட்டுப்பாலியல் குற்றத்தில் சில இளைஞர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர்.

இந்தக் குற்றத்தை செய்தவர்கள் அனைவரும் 19-21 வயதுடையவர்கள் என்றும் காவல் துறையினர் சார்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. கர்ஜா காவல் துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. வன்முறைக்கு ஆளான பெண்ணிற்கு முறையான சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும் கர்ஜா காவல் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். தற்போது குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.