ஃபேஸ்புக்கில் மலர்ந்த வெற்றுக் காதல்… இளம்பெண்ணை 25 பேர் கூட்டு பாலியல் செய்த கொடூரம்!

  • IndiaGlitz, [Monday,May 17 2021]

கொரோனா பேரிடரால் இந்தியாவே நிலைக் குலைந்து போய் இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் தங்கி வேலைப் பார்த்து வரும் ஒரு இளம்பெண் தன்னுடைய ஃபேஸ்புக் காதலனைப் பார்க்க ஹரியாணா சென்றுள்ளார். ஹரியாணா வந்த அவரை காதலனோடு சேர்ந்து 25 பேர் கூட்டுப்பாலியல் செய்தக் கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரப்பிரதேசம், குருகிராமில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் ஒரு இளம் பெண் (22) தற்போது டெல்லியில் தங்கி வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் ஃபேஸ்புக் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டு இவர் கடந்த சில மாதங்களாக ஹரியாணாவை சேர்ந்த சாகர் என்பவருடன் பழகி வருகிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இளம்பெண்ணிடம் சாகர் காதலிப்பதாகத் தெரிவித்து உள்ளார்.

மேலும் தன்னுடைய பெற்றோரிடம் அவரை அழைத்து செல்ல விரும்புவதாகவும் அதனால் ஹரியாணா வரும்படியும் அழைப்பு விடுத்து இருக்கிறார் சாகர். சாகரின் அழைப்பை ஏற்ற அந்த இளம்பெண் கடந்த மே 3 ஆம் தேதி ஹரியாணாவின் ஹோதல் பகுதிக்கு வந்துள்ளார். காதலியைப் பார்த்த சாகர் பெற்றோரிடம் அழைத்துச் செல்லாமல் ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணை சாகர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

மேலும் அதே பகுதியில் மது அருந்திக் கொண்டு இருந்த சாகரின் அண்ணன், அவருடைய கூட்டாளிகள் எனப் பலரும் அந்த இளம்பெண்ணை கூட்டுப் பாலியலுக்கு ஆளாக்கி இருக்கின்றனர். மேலும் அடுத்த நாள் காலை ஒரு பழைய இரும்பு கடைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றதாகவும் அங்கு இருந்த சிலரும் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஹரியாணாவின் ஹசன்பூர் எனும் பகுதியில் அந்தப் பெண்ணை வீசி சென்றுள்ளனர்.

இப்படி 25 பேரால் சிதைக்கப்பட்ட அந்த இளம்பெண் 9 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் தேறி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதனால் 25 பேர் மீது கடத்தல், கூட்டப்பாலியல் எனப் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

More News

நீராவி கொரோனாவை கட்டுப்படுத்துமா? எப்படி செய்ய வேண்டும்? விளக்கும் வீடியோ!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று தற்போது தீவிரம் பெற்று இருக்கிறது.

இந்தியாவின் குரலாய் மாற ஒரு சிறந்த வழி… செல்போனில் உடனே க்ளிக்குங்க…

கொரோனா நேரத்தில் இளசு முதல் பெருசு வரை செல்போனை வைத்துக் கொண்டே அலைந்து வருகிறோம்.

'என்னையும் கைது செய்யுங்கள்': நடிகை ஓவியாவின் அதிரடி டுவிட்!

என்னையும் கைது செய்யுங்கள் என நடிகை ஓவியா தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது

அருண்ராஜா காமராஜ் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய உதயநிதி!

இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் அவர்களும் அவருடைய மனைவி சிந்துஜா அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த

கொரோனா நிவாரண நிதி: நடிகர் விக்ரம் வழங்கிய தொகை!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது.