பத்தே பத்து ஓட்டு மட்டுமே வாங்கி பஞ்சாயத்து தலைவி ஆன பெண்: எப்படி தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,January 03 2020]

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 27, 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உடன்குடி அருகே உள்ள பிச்சிவிளை என்ற கிராம ஊராட்சியில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தேர்தலை புறக்கணித்தனர்.

இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறு வார்டுகளில் மொத்தம் 785 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதி தலித் பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த தொகுதியில் வெறும் 6 தலித் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரி மற்றும் சுந்தராச்சி என்ற இரு தலித் பெண்கள் போட்டியிட்டனர். தேர்தல் வாக்குப்பதிவின்போது அனைத்து சமூக மக்களும் தேர்தலை புறக்கணித்ததால் 6 தலித் வாக்காளர்களும், பிற சமுதாயத்தை சேர்ந்த 7 வாக்காளர்களும் என மொத்தமே 13 வாக்குகள் தான் பதிவாகியது.

பதிவான 13 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. மீதி 12 வாக்குகளில் ராஜலட்சுமி 10 வாக்குகளும், சுந்தராச்சி 2 வாக்குகளும் பெற்றதை அடுத்து ராஜலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

More News

சுறா கடித்து இழுத்துச் செல்லப்பட்ட நபர்.. போராடி மீட்ட கடலோர காவல்படை..! வீடியோ.

பெரிய வெள்ளை சுறாவால் கடிபட்ட நபரை அமெரிக்க கடலோர காவல்படை காப்பாற்றியது.

நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கு மாட்டிய இளைஞர்: பெரும் பரபரப்பு

புதுச்சேரியில் நிச்சயிக்கப்பட்ட பெண், தன்னுடன் பேச மறுத்த ஆத்திரத்தில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோதே தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கட்டுக்கட்டாக பணம், தங்க நாணயங்கள் புத்தாண்டு பரிசாக, லஞ்சம் பெற்ற மின்வாரிய அதிகாரி..!

லஞ்சமாகப் பரிசு பொருள்களை வாங்கிக் குவித்த, வேலூர் மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் கையும் களவுமாகச் சிக்கினார்.

திருமணம் நடந்தபோது மணமகளின் படுக்கையறை காட்சியை திரையிட்ட மணமகன்: அதிர்ச்சி தகவல்

திருமணம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணமகளின் படுக்கை அறை காட்சியின் வீடியோவை மணமகனே திரையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

தொண்டையில் சிக்கியில் பஜ்ஜி! சென்னை பெண் பரிதாப மரணம்!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் பஜ்ஜி சாப்பிட்ட போது அந்த பஜ்ஜி தொண்டையில் சிக்கியதால் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது