close
Choose your channels

யானை சிலைக்கு அடியில் மாட்டிக்கொண்ட பெண்: வைரல் வீடியோ

Monday, June 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேமிரா செல்போன் அறிமுகமான நாளில் இருந்து செல்பி என்ற வியாதி பலரிடம் தொற்றிக்கொண்டது. விளையாட்டாக எடுக்கும் செல்பிகள் சிலசமயம் விபரீதமாக விலைமதிப்பில்லா பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளது என்பது வேதனைக்குரியது ஆகும். செல்பி மட்டுமின்றி ரிஸ்க்கான போஸ்களில் எடுக்கும் பல புகைப்படங்கள் ஆபத்தில் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குஜராத்தில் உள்ள ஒரு பழம்பெரும் கோவிலுக்கு வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் அங்கிருந்த யானை சிலையின் நான்கு கால்களுக்கு இடையே இருந்த இடைவெளியில் நுழைந்து புகைப்படம் எடுக்க முயன்றார். ஸ்டைலாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்த பின்னர் அவர் வெளியே வர முயற்சித்தபோது அவரால் வரமுடியவில்லை.

ஒருசில நிமிடங்கள் போராடி அந்த பகுதியில் உள்ளவர்களின் துணையுடன் நீண்ட போராட்டத்திற்கு பின்னரே அவர் வெளியே வந்தார். இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலர் இதனை வேடிக்கையாக பார்த்தாலும் சுற்றுலா செல்லுமிடங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றே இந்த வீடியோ உணர்த்துவதாக கூறப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.